நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!
Oct 6, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!

Web Desk by Web Desk
Oct 29, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லுாரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத், தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேருடன் கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பன்சத்திரம் என்கிற இடத்தில் வந்தபோது, கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இராணுவத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அங்கு நினைவுச்சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வெலிங்டன் இராணுவப் பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், “இந்திய முப்படைகளின் இராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்து விட்டனர்.

அந்த விபத்து நேரிட்டபோது, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மீட்புப் பணியில் இராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே, அந்த கிராமத்தை இராணுவம் தத்தெடுத்து நிவாரணப் பொருட்கள் வழங்கியது. மேலும், அக்கிராமத்தில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த இராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில், நஞ்சப்பன்சத்திரத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அப்பகுதியில் இராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன் எடையில் பளிங்குக் கற்களாலான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவுச் சின்னத்தில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த நினைவுச் சின்னம் வரும் டிசம்பர் 8-ம் தேதி திறந்து வைக்கப்படும்” என்று கூறினர்.

Tags: accidentHelicopterNilgiriMemorial
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies