நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!
Aug 24, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லுாரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத், தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேருடன் கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பன்சத்திரம் என்கிற இடத்தில் வந்தபோது, கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இராணுவத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அங்கு நினைவுச்சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வெலிங்டன் இராணுவப் பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், “இந்திய முப்படைகளின் இராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்து விட்டனர்.

அந்த விபத்து நேரிட்டபோது, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மீட்புப் பணியில் இராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே, அந்த கிராமத்தை இராணுவம் தத்தெடுத்து நிவாரணப் பொருட்கள் வழங்கியது. மேலும், அக்கிராமத்தில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த இராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில், நஞ்சப்பன்சத்திரத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அப்பகுதியில் இராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன் எடையில் பளிங்குக் கற்களாலான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவுச் சின்னத்தில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த நினைவுச் சின்னம் வரும் டிசம்பர் 8-ம் தேதி திறந்து வைக்கப்படும்” என்று கூறினர்.

Tags: accidentHelicopterNilgiriMemorial
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

Related News

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies