ஆந்திராவில் இரயில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!
Jul 7, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் இரயில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது. இவ்விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில், இரயில் பாதையின் மேல் இருக்கும் கேபிளில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக, விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் இரயில், கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதே வழித்தடத்தில் பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இந்த இரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் இரயில் மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் 3 இரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதையடுத்து, இரயில்வே ஊழியர்களும், காவல்துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பயணிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 40  பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்த சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. இவ்விபத்தில் இரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் இரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த இரயில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று இந்தியன் இரயில்வே தெரிவித்திருக்கிறது. அதேசமயம், முதல்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் இரயில் சிக்னலை மீறிச் சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் பிறகே கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் இரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரயில் விபத்து குறித்து இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நிலைமை குறித்து ஆய்வு செய்தார். ஆந்திரப் பிரதேச முதல்வரிடம் விபத்து குறித்துப் பேசினேன். மாநில அரசு மற்றும் இரயில்வே குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும். பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: trainaccidentAndra Pradesh19 killed
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை

Next Post

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies