இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!
Oct 2, 2025, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கி.மீ. தொலைவுக்கு இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்படவிருக்கிறது.

இந்த இரயிலுக்கு அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு இரயில் சேவை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த இரயில் பாதை 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் இடம்பெறுகிறது. இந்த இரயில் சேவை, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலா நகரிலிருந்து டாக்கா வழியாக வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது.

இந்த இரயில் இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் சர்வதேச குடியேற்ற மைய இரயில் நிலையத்திலும் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். மேலும், இந்த இரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அஸ்ஸாம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரயில் பாதையில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்கான சோதனை இரயில் ஓட்டம் நேற்று நடைபெற்றது. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல 31 மணி நேரமாகிறது. இந்த இரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரயில் பாதை திட்டத்துக்காக இந்திய இரயில்வே தனது பங்காக இதுவரை 154 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கின்றனர்.

Tags: PM ModitrainIndia-Bangladesh
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு 3 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Next Post

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies