இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!
Jan 14, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்தியா-வங்கதேசம் இடையே பயணிகள் போக்குவரத்துக்கு மற்றும் சரக்குகள் கையாள்வதற்கு வசதியாக இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து வங்கதேசத்தின் அகௌரா நகருக்கு இடையே இரயில் சேவை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. அதன்படி, வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட 392.52 கோடி ரூபாய் இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் எல்லை தாண்டிய இரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, வங்கதேசத்தின் குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம், இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள இரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ. அகல இரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் 2-வது பெரிய துறைமுகமான மோங்லா அகல இரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.

மேலும், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதித் திட்டத்தின் கீழ், மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1,320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையமாகும். இந்தியாவின் என்.டி.பி.சி. லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம் – இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.

மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது அலகு அமைக்கப்பட்டிருக்கிறது. மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தை இயக்குவது வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். இத்திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.

இந்த நிலையில், மேற்கண்ட 3 திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக மேற்கண்ட 3 திட்டங்களையும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், “வங்கதேசம் – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்தபோது அளித்த விருந்தோம்பலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்தியா – வங்கதேச ஒத்துழைப்பின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். நமது உறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா – வங்கதேசம் இணைந்து செய்த பணிகள், இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் கூட செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில், நமது உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.

வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான முதல் இரயில் இணைப்பு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம். திரிபுரா மாநிலம் தனது விடுதலைப் போராட்ட நாட்களில் இருந்து வங்கதேசத்துடன் வலுவான உறவைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கப்பல் சேவையை தொடங்கியதால் சுற்றுலாத் துறை மேம்படும்” என்றார்.

Tags: PM Moditrainflags offIndia-Bangladesh
ShareTweetSendShare
Previous Post

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!

Next Post

விரைவு பயணிகள் இரயில் தடம் புரண்டு விபத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies