இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!
Jan 24, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்தியா-வங்கதேசம் இடையே பயணிகள் போக்குவரத்துக்கு மற்றும் சரக்குகள் கையாள்வதற்கு வசதியாக இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து வங்கதேசத்தின் அகௌரா நகருக்கு இடையே இரயில் சேவை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. அதன்படி, வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட 392.52 கோடி ரூபாய் இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் எல்லை தாண்டிய இரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, வங்கதேசத்தின் குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம், இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள இரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ. அகல இரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் 2-வது பெரிய துறைமுகமான மோங்லா அகல இரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.

மேலும், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதித் திட்டத்தின் கீழ், மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1,320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையமாகும். இந்தியாவின் என்.டி.பி.சி. லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம் – இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.

மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது அலகு அமைக்கப்பட்டிருக்கிறது. மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தை இயக்குவது வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். இத்திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.

இந்த நிலையில், மேற்கண்ட 3 திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக மேற்கண்ட 3 திட்டங்களையும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், “வங்கதேசம் – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்தபோது அளித்த விருந்தோம்பலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்தியா – வங்கதேச ஒத்துழைப்பின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். நமது உறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா – வங்கதேசம் இணைந்து செய்த பணிகள், இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் கூட செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில், நமது உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.

வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான முதல் இரயில் இணைப்பு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம். திரிபுரா மாநிலம் தனது விடுதலைப் போராட்ட நாட்களில் இருந்து வங்கதேசத்துடன் வலுவான உறவைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கப்பல் சேவையை தொடங்கியதால் சுற்றுலாத் துறை மேம்படும்” என்றார்.

Tags: trainflags offIndia-BangladeshPM Modi
ShareTweetSendShare
Previous Post

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!

Next Post

விரைவு பயணிகள் இரயில் தடம் புரண்டு விபத்து!

Related News

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

டிரம்ப் முன்னிலையில் சுவிட்சர்லாந்தின் நடந்த சம்பவம் – கையெழுத்திட்ட உலக நாடுகள்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் – இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கு : 27-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies