நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!
Apr 29, 2026, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வசித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறிய 200-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கொழும்பில் “நாம் 200” என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். அதேபோல, கொழும்பில் இந்தியா- இலங்கை வர்த்தக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, தமிழர்களின் தாயக நிலப் பகுதியான திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறார். திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் பார்வையிடுகிறார்.

மேலும், யாழ்ப்பாணம் செல்லும் நிர்மலா சீதாராமன், அங்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளை ஒன்றை திறந்து வைக்கிறார். இதுதவிர, யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாசார மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதோடு, வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.

நிதியமைச்சரின் இப்பயணத்தின்போது, பௌத்த புனிதத் தலமான தலதா மாளிகை, அனுராதபுரம் ஜெயஸ்ரீ மகாபோதி மற்றும் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகிய இடங்கிலும் வழிபாடு செய்கிறார்.

கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை செல்கிறார்.

Tags: srilankafinance ministerNirmala seetharam3 Days visit
ShareTweetSendShare
Previous Post

பாஜக நிர்வாகிகள் கைது! – அண்ணாமலை கடும் கண்டனம்!

Next Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies