நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!
Jul 25, 2025, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வசித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறிய 200-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கொழும்பில் “நாம் 200” என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். அதேபோல, கொழும்பில் இந்தியா- இலங்கை வர்த்தக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, தமிழர்களின் தாயக நிலப் பகுதியான திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறார். திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் பார்வையிடுகிறார்.

மேலும், யாழ்ப்பாணம் செல்லும் நிர்மலா சீதாராமன், அங்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளை ஒன்றை திறந்து வைக்கிறார். இதுதவிர, யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாசார மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதோடு, வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.

நிதியமைச்சரின் இப்பயணத்தின்போது, பௌத்த புனிதத் தலமான தலதா மாளிகை, அனுராதபுரம் ஜெயஸ்ரீ மகாபோதி மற்றும் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகிய இடங்கிலும் வழிபாடு செய்கிறார்.

கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை செல்கிறார்.

Tags: srilankafinance ministerNirmala seetharam3 Days visit
ShareTweetSendShare
Previous Post

பாஜக நிர்வாகிகள் கைது! – அண்ணாமலை கடும் கண்டனம்!

Next Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies