பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
Oct 6, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது.

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடையவிருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி இரவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதாவது, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதேசமயம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே கலைத்து விட்டால் 90 நாட்கள் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமானது. இதனால், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் சஜீல் ஸ்வாதி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே, பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் தேதி முடிவுக்கு வந்தது என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தி தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்கு முன்னதாகவே, பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதன் பிறகே பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: pakistanElectionDate declared
ShareTweetSendShare
Previous Post

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் புதிய உத்தரவு!

Next Post

இந்தியா வந்தார் பூடான் மன்னர்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies