ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 6, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருட்பெரும் சோதியான வள்ளலார் அவதார தினம் இன்று. ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற காப்பிய மொழிக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்கே செலவழித்த வள்ளலார் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

உலகிலேயே ஒரு அதிசயமான புண்ணிய பூமி தமிழ்நாடு ஆகும். எந்த காலத்துக்கு என்ன தேவையோ அதை மக்களுக்கு வழங்க இறைவனே ஒரு ஞானியை அனுப்பி வைப்பான். அந்த வரிசையில் வந்தவர் தான் வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள்.

1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி, கடலூர் அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதரித்தார். தந்தை ராமையா பிள்ளை-சின்னம்மையார் தம்பதியருக்கு திருமகனாக பிறந்த அவரது பெற்றோர் இராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.

கருவிலேயே திருவுடைய இராமலிங்கத்துக்கு, சிறுவயதிலேயே, திருவொற்றியூர் வடிவுடையம்மன் நேரில் வந்து உணவூட்டிய அதிசயம் நடந்தது. தனது 9-வது வயதில் பல தெய்வப் பனுவல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்ற வள்ளலார், தனது 12 வயதிலேயே இறைப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

அன்றைய காலக் கட்டத்தில் , சென்னையில் பெரும்புலவராக விளங்கிய தொழுவூர் வேலாயுதனார் வள்ளலாரின் மாணவரானார் என்பதே வள்ளலாரின் பெருமையைச் சொல்லும். 1850ஆம் ஆண்டு, தனது உறவினர்களின் வற்புறுத்தலால் தனது சகோதரி மகளான தனம் அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார் வள்ளலார்.

1858 ஆம் ஆண்டு, வள்ளலார், இல்லற வாழ்வைத் துறந்து, முழுமையான இறைவாழ்வை மேற்கொண்டார். தலயாத்திரையாக கிளம்பியவர் , வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மணியக்காரர் இல்லத்தில் வந்து தங்கினார். 1867ஆம் ஆண்டு வரை வள்ளலார் கருங்குழி கிராமத்திலேயே வாழ்ந்து வந்தார்.

1867-ம் ஆண்டு மே மாதம் 23-ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது

வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் என்பது அவர் உருவாக்கிய ஞானசபை, தருமச்சாலை, ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
வள்ளலார் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்குத் தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனிஇடம் ஏற்படுத்தி அவற்றுக்கு திருமந்திரம், சபை, சாலை, வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலியவற்றை வழங்கியுள்ளார்.

வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் கருப்பு,நீலம், பச்சை, சிவப்பு,மஞ்சள்,வெள்ளை,புகை நிறம் ஆகிய 7 திரைகள் அமைத்தார். தைப்பூசத் திருவிழாவின் போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. சத்திய ஞானசபையில் வள்ளலார் ஏற்படுத்திய வழிமுறைகளின் படியே ஜோதிவழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாள்கள் வாழ்ந்த வள்ளலார், 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார். உயிர்களைப் பசியிலிருந்து காப்பதும், பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத்தொண்டு என்று ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்த வள்ளலாரை போற்றுவோம்.

Tags: Marudhursothi Vallalar.Ramalinga SwamiTamil NaduvallalarVadalur
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

Next Post

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies