ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!
Nov 18, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியை எதிர்க்க இண்டி கூட்டணிக்கு எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தனர். ஆனால், பீகாரின் வளர்ச்சிக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.

சோனியா, மன்மோகன் ஆட்சியில், லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது பீகார் மாநிலத்துக்கு 10 ஆண்டுகளில் 1.50 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பீகார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். இவர்கள் குடும்ப அரசியல் நடத்துபவர்கள்.

ஒருவருக்கு (நிதீஷ் குமார்) பிரதமராக வேண்டும் என்று ஆசை. மற்றொருவருக்கு (லாலு பிரசாத் யாதவ்) தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், இரண்டையும் இருவருமே மறந்துவிடுங்கள் என்று நிதீஷ்குமாரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் பதவிக்கு இண்டி கூட்டணி உங்களை பிரதிநிதியாக நியமிக்கவில்லை. நீங்கள் போட்டியிலேயே இல்லை.

“ஜே.எம்.” (JAM) என்பதில் 2 வகைகள் இருக்கின்றன. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, ஜாம் (JAM) என்பதற்கு ஜன்தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு. ஆனால், பீகார் அரசுக்கு ஜாம் என்றால் ‘ஜாதி வாத்’ (ஜாதி வெறி), ‘பரிவார்வாத்’ (குடும்ப அரசியல்), ‘அப்ராத்’ (குற்றம்) மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தல் ஆகியவைதான்.

ஆனால், கூட்டணிக் கட்சிகள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலம் விரும்பிகள் என்று அழைத்துக் கொள்கின்றன. நிதீஷ்குமார் ஆட்சியில் பா.ஜ.க. அங்கம் வகித்தபோது இந்த கணக்கெடுப்பு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்படியொரு அநீதி நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. பின்தங்கிய சமுதாயத்தை காங்கிரஸ் எப்போதும் புறக்கணிக்கிறது, எதிர்க்கிறது, அதேசமயம், பிரதமர் மோடி எப்போதும் பின்தங்கிய சமுதாயத்தை மதிக்கிறார்” என்றார்.

Tags: BiharAmit sha
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!

Next Post

ஸ்பெயினில் காட்டுத்தீ: 850 பேர் வெளியேற்றம்!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies