ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!
Mar 19, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியை எதிர்க்க இண்டி கூட்டணிக்கு எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தனர். ஆனால், பீகாரின் வளர்ச்சிக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.

சோனியா, மன்மோகன் ஆட்சியில், லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது பீகார் மாநிலத்துக்கு 10 ஆண்டுகளில் 1.50 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பீகார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். இவர்கள் குடும்ப அரசியல் நடத்துபவர்கள்.

ஒருவருக்கு (நிதீஷ் குமார்) பிரதமராக வேண்டும் என்று ஆசை. மற்றொருவருக்கு (லாலு பிரசாத் யாதவ்) தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், இரண்டையும் இருவருமே மறந்துவிடுங்கள் என்று நிதீஷ்குமாரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் பதவிக்கு இண்டி கூட்டணி உங்களை பிரதிநிதியாக நியமிக்கவில்லை. நீங்கள் போட்டியிலேயே இல்லை.

“ஜே.எம்.” (JAM) என்பதில் 2 வகைகள் இருக்கின்றன. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, ஜாம் (JAM) என்பதற்கு ஜன்தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு. ஆனால், பீகார் அரசுக்கு ஜாம் என்றால் ‘ஜாதி வாத்’ (ஜாதி வெறி), ‘பரிவார்வாத்’ (குடும்ப அரசியல்), ‘அப்ராத்’ (குற்றம்) மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தல் ஆகியவைதான்.

ஆனால், கூட்டணிக் கட்சிகள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலம் விரும்பிகள் என்று அழைத்துக் கொள்கின்றன. நிதீஷ்குமார் ஆட்சியில் பா.ஜ.க. அங்கம் வகித்தபோது இந்த கணக்கெடுப்பு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்படியொரு அநீதி நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. பின்தங்கிய சமுதாயத்தை காங்கிரஸ் எப்போதும் புறக்கணிக்கிறது, எதிர்க்கிறது, அதேசமயம், பிரதமர் மோடி எப்போதும் பின்தங்கிய சமுதாயத்தை மதிக்கிறார்” என்றார்.

Tags: BiharAmit sha
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!

Next Post

ஸ்பெயினில் காட்டுத்தீ: 850 பேர் வெளியேற்றம்!

Related News

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies