பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Nov 11, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக நினைத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாகப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையையே குஜராத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் அவதூறாகப் பேசினார். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம்,  பிரியங்கா காந்திக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: Election commissionpriyanka gandhiSent notice
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா!

Next Post

தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!

Related News

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies