பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Aug 3, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக நினைத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாகப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையையே குஜராத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் அவதூறாகப் பேசினார். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம்,  பிரியங்கா காந்திக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: Sent noticeElection commissionpriyanka gandhi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா!

Next Post

தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies