பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Feb 16, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக நினைத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாகப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையையே குஜராத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் அவதூறாகப் பேசினார். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம்,  பிரியங்கா காந்திக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: Election commissionpriyanka gandhiSent notice
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா!

Next Post

தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!

Related News

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies