ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!
Oct 23, 2025, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போஜ்பூரில் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்று ஊழலுக்கும், குடும்பவாதத்திற்கும், வம்சவாதத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றிருக்கிறது..

ஒருபுறம் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கைகளை மாற்ற நினைக்கும் பா.ஜ.க., மறுபுறம் உங்களுக்கு துரோகம் செய்து உங்களது உரிமைகளை பறித்து தனது கஜானாவை நிரப்ப நினைக்கும் காங்கிரஸ் கட்சி. ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ். யாரோ நான் ஜானேயு தாரி (பூணூல் அணிபவர்) என்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பூணூலே அணியத் தெரியாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் ​அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று சொன்னபோது, இராமர் என்பது கற்பனை கதாபாத்திரம், அதற்கு அறிவியல் அடிப்படையும் இல்லை, இராமருக்கு சரித்திர அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். ஆனால், தற்போது ​​புதிய காங்கிரஸ் தலைவர், இராமரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உள்ளது. அதுதான் ‘லாபடா மாடல்’ (காணாமல் போன மாடல்). காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர், வளர்ச்சி, மின்சாரம், சாலைகள் என எதையும் காணவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் பணியை கமல்நாத் செய்தாரா? நலத்திட்டத்தை நிறுத்தினார். ஆனால், சிவராஜ் சிங் அரசு 600 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் சம்பல் யோஜனாவை துவக்கியது” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaMadya PradeshCompaign
ShareTweetSendShare
Previous Post

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Next Post

சுதந்திரப் போராட்ட தியாகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

Related News

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies