ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!
Jun 23, 2026, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போஜ்பூரில் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்று ஊழலுக்கும், குடும்பவாதத்திற்கும், வம்சவாதத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றிருக்கிறது..

ஒருபுறம் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கைகளை மாற்ற நினைக்கும் பா.ஜ.க., மறுபுறம் உங்களுக்கு துரோகம் செய்து உங்களது உரிமைகளை பறித்து தனது கஜானாவை நிரப்ப நினைக்கும் காங்கிரஸ் கட்சி. ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ். யாரோ நான் ஜானேயு தாரி (பூணூல் அணிபவர்) என்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பூணூலே அணியத் தெரியாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் ​அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று சொன்னபோது, இராமர் என்பது கற்பனை கதாபாத்திரம், அதற்கு அறிவியல் அடிப்படையும் இல்லை, இராமருக்கு சரித்திர அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். ஆனால், தற்போது ​​புதிய காங்கிரஸ் தலைவர், இராமரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உள்ளது. அதுதான் ‘லாபடா மாடல்’ (காணாமல் போன மாடல்). காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர், வளர்ச்சி, மின்சாரம், சாலைகள் என எதையும் காணவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் பணியை கமல்நாத் செய்தாரா? நலத்திட்டத்தை நிறுத்தினார். ஆனால், சிவராஜ் சிங் அரசு 600 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் சம்பல் யோஜனாவை துவக்கியது” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaMadya PradeshCompaign
ShareTweetSendShare
Previous Post

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Next Post

சுதந்திரப் போராட்ட தியாகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies