ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!
Aug 8, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போஜ்பூரில் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்று ஊழலுக்கும், குடும்பவாதத்திற்கும், வம்சவாதத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றிருக்கிறது..

ஒருபுறம் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கைகளை மாற்ற நினைக்கும் பா.ஜ.க., மறுபுறம் உங்களுக்கு துரோகம் செய்து உங்களது உரிமைகளை பறித்து தனது கஜானாவை நிரப்ப நினைக்கும் காங்கிரஸ் கட்சி. ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ். யாரோ நான் ஜானேயு தாரி (பூணூல் அணிபவர்) என்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பூணூலே அணியத் தெரியாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் ​அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று சொன்னபோது, இராமர் என்பது கற்பனை கதாபாத்திரம், அதற்கு அறிவியல் அடிப்படையும் இல்லை, இராமருக்கு சரித்திர அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். ஆனால், தற்போது ​​புதிய காங்கிரஸ் தலைவர், இராமரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உள்ளது. அதுதான் ‘லாபடா மாடல்’ (காணாமல் போன மாடல்). காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர், வளர்ச்சி, மின்சாரம், சாலைகள் என எதையும் காணவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் பணியை கமல்நாத் செய்தாரா? நலத்திட்டத்தை நிறுத்தினார். ஆனால், சிவராஜ் சிங் அரசு 600 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் சம்பல் யோஜனாவை துவக்கியது” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaMadya PradeshCompaign
Share
Tweet
SendShare
Previous Post

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Next Post

சுதந்திரப் போராட்ட தியாகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies