புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!
Jan 14, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின.

புதுடெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பீகார் மாநிலத்துக்கு புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழக்கம்போல நேற்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு பீகார் மாநிலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகேயுள்ள சாராய்போபட் எனும் இரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, திடீரென இரயிலில் இருந்து புகை வந்தது. இதைக் கண்ட இன்ஜின் டிரைவர், உடனடியாக இரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக இரயிலை நிறுத்தினார்.

பின்னர், இரயிலில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும், இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இத்தீவிபத்தில் 3 இரயில் பெட்டிகள் எரிந்து நாசமாகி விட்டன.

இத்தீவிபத்து குறித்து எட்டாவா காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், “டெல்லியில் இருந்து பீகார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இரயிலில் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், அவை தீக்காயங்களாகத் தெரியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

அதேசமயம், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய இரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வட மத்திய இரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், “புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் எஸ்-1 பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதை சாராய்போபட் சந்திப்பில் உள்ள காவலர் கவனித்திருக்கிறார்.

பின்னர், இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: delhi-darbhanga express trainFire
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் “சாவ் பர்வா” திருவிழா கோலாகலம்!

Next Post

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies