காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!
Sep 30, 2025, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர்கள்  ராஜஸ்தானில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகேயுள்ள பிலிபங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2014-ம் ஆண்டுக்கு முன்பு, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. 2014-க்கு பிறகு ஏழைகள், மனித இனம் மற்றும் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். ராஜஸ்தானில் ஏழைகளைக் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தானில் கூடுதலாக 12 முதல் 13 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும். அதேபோல, ராஜஸ்தான் பா.ஜ.க. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளுக்கு 12,000 வழங்க முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடமெல்லாம் ஊழலும், உறவுமுறையும்தான் இருக்கிறது. ராஜஸ்தானில் ஜல் ஜீவன் பணிக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிட்டது. ஆனால், அதிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்து உங்களை விஷத் தண்ணீரைக் குடிக்க விட்டு விட்டது.

உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸுக்கு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க உரிமை உண்டா? தீபாவளி முடிந்துவிட்டது. எங்கள் அம்மாக்கள், சகோதரிகள் வீட்டில் 15 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், எப்போது தீபாவளி வருகிறதோ அப்போது வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள்.

அதேபோல, இந்தத் தேர்தலும் ஜனநாயகத்தின் தீபாவளியாகும். ஆகவே, இந்த தீபாவளி நாளில் இந்த காங்கிரஸ் கட்சியை எந்த மூலையிலும் விட்டுவைக்காத வகையில் துடைத்தெறிய வேண்டும்” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் மோடி இருக்கிறார் – அண்ணாமலை ட்வீட்

Next Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Related News

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள்!

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை : இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

காசா போர் தொடர்பாக ட்ரம்புடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை – 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies