காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!
Mar 15, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர்கள்  ராஜஸ்தானில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகேயுள்ள பிலிபங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2014-ம் ஆண்டுக்கு முன்பு, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. 2014-க்கு பிறகு ஏழைகள், மனித இனம் மற்றும் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். ராஜஸ்தானில் ஏழைகளைக் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தானில் கூடுதலாக 12 முதல் 13 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும். அதேபோல, ராஜஸ்தான் பா.ஜ.க. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளுக்கு 12,000 வழங்க முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடமெல்லாம் ஊழலும், உறவுமுறையும்தான் இருக்கிறது. ராஜஸ்தானில் ஜல் ஜீவன் பணிக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிட்டது. ஆனால், அதிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்து உங்களை விஷத் தண்ணீரைக் குடிக்க விட்டு விட்டது.

உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸுக்கு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க உரிமை உண்டா? தீபாவளி முடிந்துவிட்டது. எங்கள் அம்மாக்கள், சகோதரிகள் வீட்டில் 15 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், எப்போது தீபாவளி வருகிறதோ அப்போது வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள்.

அதேபோல, இந்தத் தேர்தலும் ஜனநாயகத்தின் தீபாவளியாகும். ஆகவே, இந்த தீபாவளி நாளில் இந்த காங்கிரஸ் கட்சியை எந்த மூலையிலும் விட்டுவைக்காத வகையில் துடைத்தெறிய வேண்டும்” என்றார்.

Tags: CompaignPM ModiElectionRajasthan
ShareTweetSendShare
Previous Post

நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் மோடி இருக்கிறார் – அண்ணாமலை ட்வீட்

Next Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies