விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 19 விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை கடந்த 4ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஏ.அருள் (குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை திரும்பப் பெறவில்லை) உட்பட 20 பேரும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரசு வழக்கறிஞர் கே.வி. மனோகரன் ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்டார், குறிப்பாக 7 பேர் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு (ரத்து உத்தரவு) தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதாக வாதிட்டார்.

விவசாயிகள் தரப்பில் வழக்கறிஞர் எம்.அன்பழகன் வாதிடுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வசிப்பவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்றார்.

இதனையடுத்து 19 பேருக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிபதி, பி.மதுசூதனன் வேலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அருள் கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.

Tags: protesttiruvannamalaifomers protest
ShareTweetSendShare
Previous Post

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies