விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!
May 30, 2025, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 19 விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை கடந்த 4ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஏ.அருள் (குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை திரும்பப் பெறவில்லை) உட்பட 20 பேரும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரசு வழக்கறிஞர் கே.வி. மனோகரன் ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்டார், குறிப்பாக 7 பேர் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு (ரத்து உத்தரவு) தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதாக வாதிட்டார்.

விவசாயிகள் தரப்பில் வழக்கறிஞர் எம்.அன்பழகன் வாதிடுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வசிப்பவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்றார்.

இதனையடுத்து 19 பேருக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிபதி, பி.மதுசூதனன் வேலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அருள் கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.

Tags: tiruvannamalaifomers protestprotest
ShareTweetSendShare
Previous Post

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Related News

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் சாதாரண ஒன்றாகிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies