விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!
Oct 22, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 19 விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை கடந்த 4ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஏ.அருள் (குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை திரும்பப் பெறவில்லை) உட்பட 20 பேரும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரசு வழக்கறிஞர் கே.வி. மனோகரன் ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்டார், குறிப்பாக 7 பேர் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு (ரத்து உத்தரவு) தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதாக வாதிட்டார்.

விவசாயிகள் தரப்பில் வழக்கறிஞர் எம்.அன்பழகன் வாதிடுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வசிப்பவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்றார்.

இதனையடுத்து 19 பேருக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிபதி, பி.மதுசூதனன் வேலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அருள் கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.

Tags: protesttiruvannamalaifomers protest
ShareTweetSendShare
Previous Post

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies