காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!
Jan 14, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன.

ஆகவே, பா.ஜ.க. தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலரும் தெலங்கானா மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் திகானாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வரவிருக்கும் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். ஆகவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதாகவும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் கே.சி.ஆர். வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?

அதேபோல, கல்லூரி கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரா? காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் சீனப் பொருட்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் கிடையாது. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் இறுதியில் பி.ஆர்.எஸ்.ஸுக்கு மாறிவிடுவார்கள்.

இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் பி.ஆர்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், கே.சி.ஆர். மீண்டும் முதல்வராக்கப்படுவார்.

அதற்கு பதிலாக பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்யும்” என்றார்.

Tags: Home ministerbjpTelanganaelection compaignAmit sha
ShareTweetSendShare
Previous Post

பெண் செய்தியாளர் கொலை வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies