காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!
Aug 18, 2025, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன.

ஆகவே, பா.ஜ.க. தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலரும் தெலங்கானா மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் திகானாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வரவிருக்கும் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். ஆகவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதாகவும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் கே.சி.ஆர். வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?

அதேபோல, கல்லூரி கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரா? காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் சீனப் பொருட்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் கிடையாது. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் இறுதியில் பி.ஆர்.எஸ்.ஸுக்கு மாறிவிடுவார்கள்.

இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் பி.ஆர்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், கே.சி.ஆர். மீண்டும் முதல்வராக்கப்படுவார்.

அதற்கு பதிலாக பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்யும்” என்றார்.

Tags: Home ministerbjpTelanganaelection compaignAmit sha
ShareTweetSendShare
Previous Post

பெண் செய்தியாளர் கொலை வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!

Related News

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies