இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
Jan 14, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இம்மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்திருக்கிறது. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் பிரதமர் மோடிக்கு தங்களது ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும்.

குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதோடு, தெலங்கானாவில் கடந்த முறை பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம்” என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் அரசியல் மற்றும் தேர்தல் முறை உலகளவில் பாராட்டப்படுகிறது. ஒருவேளை நாடு பாராட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லைபோ. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், EVM மோசடி குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கேலிக்குரியதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

Tags: Central Ministerpiyush goyalbjp won3 state Assembly
ShareTweetSendShare
Previous Post

போபால் விஷ வாயு கசிவு 39-வது நினைவு தினம்!

Next Post

4-ம் தேதி மெட்ரோ இரயில் இயங்குமா?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies