இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
Aug 13, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இம்மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்திருக்கிறது. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் பிரதமர் மோடிக்கு தங்களது ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும்.

குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதோடு, தெலங்கானாவில் கடந்த முறை பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம்” என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் அரசியல் மற்றும் தேர்தல் முறை உலகளவில் பாராட்டப்படுகிறது. ஒருவேளை நாடு பாராட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லைபோ. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், EVM மோசடி குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கேலிக்குரியதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

Tags: Central Ministerpiyush goyalbjp won3 state Assembly
Share
Tweet
SendShare
Previous Post

போபால் விஷ வாயு கசிவு 39-வது நினைவு தினம்!

Next Post

4-ம் தேதி மெட்ரோ இரயில் இயங்குமா?

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies