U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

U -19 ஆசியக் கோப்பை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜம்ஷித் சத்ரன் மற்றும் வஃபியுல்லா தாரகில் களமிறங்கினர். 3 வது ஓவரில் வஃபியுல்லா தாரகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சோஹில் கான் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜம்ஷித் சத்ரன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் வாய்ப்பை தவறவிட்டார். பின்பு களமிறங்கிய அக்ரம் முகமதுசாய் 20 ரன்களும் நுமன் ஷா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய முகமது யூனுஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். நமன் திவாரி 2 விக்கெட்களும், முருகன் மற்றும் முஷீர் கான் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். 3 வது ஓவரில் ஆதர்ஷ் சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருத்ரா படேல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து உதய் சஹாரன் மாக 20 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து முஷீர் கான் களமிறங்கினார். முஷீர் கான் மற்றும் அர்ஷின் குல்கர்னி இவர்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இதில் அர்ஷின் குல்கர்னி 105 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முஷீர் கான் 53 பந்துகளில் 48 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 38 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பஷீர் அகமது, வஹிதுல்லாஹ் சத்ரன் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

Tags: Afghanistanindia wonasia cup u 19CricketIndia
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!

Next Post

மிசோரம் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies