சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. இதனையடுத்து மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது. து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.
அடையாறு, சென்னை துறைமுகம், மேடவாக்கம், புழுதிவாக்கம், மற்றும் வடசென்னையில் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் முதல் உள்வட்ட சாலை வழியாக நாப்பாளையம் வரையிலும் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கித்வித்த ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.