ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பிரிட்ஜ், வாஷிங் மெசின், டிவி, கட்டில், மெத்தை வெள்ளத்தில் மிதந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நிலைமை ஓரளவு சீரடைந்து வந்தாலும், குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீரை அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

மேலும் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

ஆனால் வெளியூரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான  ஹவுஸ் ஓனர்கள் கீழ்தளத்தில் உள்ள வீடுகளையே வாடகைக்கு விடுகின்றனர். முதல் தளத்தில் அவர்கள் தங்கிக்கொள்கின்றனர்.

சென்னை வெள்ளத்தின் போது அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது கீழ் தளத்தில் வசிப்பவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையில் வசிக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா  என பல்வேறு ஊடகங்க்ள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,  ரேசன் கார்டு இல்லாதவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றும், வேறு ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கலாம் என  மழுப்பலாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்படாத பல ரேசன் அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, உண்மையாக பாதிக்கப்பட்ட ரேசன் கார்டு இல்லாதவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே  சென்னை வசிக்கும் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக  விரிவான செய்திக்குறிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: tokenchennai rainration card6000 aidtamil nadu government
ShareTweetSendShare
Previous Post

மத்திய கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பதவி உயா்வு: நாடாளுமன்றத்தில் விளக்கம்!

Next Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies