ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 

Web Desk by Web Desk
Dec 12, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பிரிட்ஜ், வாஷிங் மெசின், டிவி, கட்டில், மெத்தை வெள்ளத்தில் மிதந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நிலைமை ஓரளவு சீரடைந்து வந்தாலும், குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீரை அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

மேலும் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

ஆனால் வெளியூரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான  ஹவுஸ் ஓனர்கள் கீழ்தளத்தில் உள்ள வீடுகளையே வாடகைக்கு விடுகின்றனர். முதல் தளத்தில் அவர்கள் தங்கிக்கொள்கின்றனர்.

சென்னை வெள்ளத்தின் போது அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது கீழ் தளத்தில் வசிப்பவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையில் வசிக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா  என பல்வேறு ஊடகங்க்ள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,  ரேசன் கார்டு இல்லாதவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றும், வேறு ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கலாம் என  மழுப்பலாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்படாத பல ரேசன் அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, உண்மையாக பாதிக்கப்பட்ட ரேசன் கார்டு இல்லாதவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே  சென்னை வசிக்கும் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக  விரிவான செய்திக்குறிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: tokenchennai rainration card6000 aidtamil nadu government
ShareTweetSendShare
Previous Post

மத்திய கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பதவி உயா்வு: நாடாளுமன்றத்தில் விளக்கம்!

Next Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies