செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை பாரதப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜிபிஏஐ உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது என்பது மகிழ்ச்சியான விசயமாகும்.

21-ம் நூற்றாண்டின் முன்னேற்றத்துக்கும் வீழ்ச்சிக்கும் செயற்கை நுண்ணறிவு முக்கியக் கருவியாக அமையக் கூடும். ‘டீப் ஃபேக்’, சைபா் பாதுகாப்பு, தகவல் திருட்டு போன்ற தொழில்நுட்ப சாவல்களுடன் தீவிரவாதிகளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த தொடங்கினால் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும். இச்சிக்கலைப் பற்றி ஆலோசித்து, செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைத் தடுக்க உறுதியான திட்டம் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுக்கு மனிதர்களை மையமாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க ஜி20 தலைமையின்போது இந்தியா முன்மொழிந்தது. பல்வேறு சர்வதேச பிரச்சனைகளுக்கு ஒப்பந்தங்கள், நெறிமுறைகள் இருப்பதைப்போல, செயற்கை நுண்ணறிவின் நேர்மையான பயன்பாட்டுக்காக சர்வதேச கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுடன் உலகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை, நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. எனவே, அவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு தேசமும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். செயற்கை நுண்ணறிவின் நோ்மையான பயன்பாட்டுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் உதவிடும் வகையில் சமீபத்தில் சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சுகாதாரம், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை உருமாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு, நாட்டின் நிலையான வளா்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும்.

நெறிமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக அக்கறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை உயரும். தரவுகள் முறையாக பாதுகாக்கப்பட்டால் தனியுரிமை பற்றிய கவலைகள் குறையும். செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அனைவருக்குமான நோ்மறை முடிவுகளைத் தரும்.

செயற்கை நுண்ணறிவு என்பது புதிய தொழில்நுட்பம் மட்டுமல்ல, சர்வதேச இயக்கமும் கூட. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிந்தனைகளில் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா தற்போது உள்ளது. இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் செயற்கை நுண்ணறிவின் வரம்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்திய தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு பயன்படுத்துவதற்தானத் திட்டப் பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும்” என்றார்.

Tags: LaunchesArtificial intelligenceSummit 2023PM Modi
ShareTweetSendShare
Previous Post

பிறர் சொத்தை ஆக்கிரமித்துத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

நடப்பு ஆண்டு ரூ.58.378 கோடி கூடுதல் செலவினம்: மக்களவை ஒப்புதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies