செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்: பிரதமர் மோடி!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை பாரதப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜிபிஏஐ உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது என்பது மகிழ்ச்சியான விசயமாகும்.

21-ம் நூற்றாண்டின் முன்னேற்றத்துக்கும் வீழ்ச்சிக்கும் செயற்கை நுண்ணறிவு முக்கியக் கருவியாக அமையக் கூடும். ‘டீப் ஃபேக்’, சைபா் பாதுகாப்பு, தகவல் திருட்டு போன்ற தொழில்நுட்ப சாவல்களுடன் தீவிரவாதிகளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த தொடங்கினால் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும். இச்சிக்கலைப் பற்றி ஆலோசித்து, செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைத் தடுக்க உறுதியான திட்டம் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுக்கு மனிதர்களை மையமாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க ஜி20 தலைமையின்போது இந்தியா முன்மொழிந்தது. பல்வேறு சர்வதேச பிரச்சனைகளுக்கு ஒப்பந்தங்கள், நெறிமுறைகள் இருப்பதைப்போல, செயற்கை நுண்ணறிவின் நேர்மையான பயன்பாட்டுக்காக சர்வதேச கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுடன் உலகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை, நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. எனவே, அவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு தேசமும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். செயற்கை நுண்ணறிவின் நோ்மையான பயன்பாட்டுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் உதவிடும் வகையில் சமீபத்தில் சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சுகாதாரம், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை உருமாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு, நாட்டின் நிலையான வளா்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும்.

நெறிமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக அக்கறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை உயரும். தரவுகள் முறையாக பாதுகாக்கப்பட்டால் தனியுரிமை பற்றிய கவலைகள் குறையும். செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அனைவருக்குமான நோ்மறை முடிவுகளைத் தரும்.

செயற்கை நுண்ணறிவு என்பது புதிய தொழில்நுட்பம் மட்டுமல்ல, சர்வதேச இயக்கமும் கூட. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிந்தனைகளில் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா தற்போது உள்ளது. இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் செயற்கை நுண்ணறிவின் வரம்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்திய தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு பயன்படுத்துவதற்தானத் திட்டப் பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும்” என்றார்.

Tags: PM ModiLaunchesArtificial intelligenceSummit 2023
Share
Tweet
SendShare
Previous Post

பிறர் சொத்தை ஆக்கிரமித்துத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

நடப்பு ஆண்டு ரூ.58.378 கோடி கூடுதல் செலவினம்: மக்களவை ஒப்புதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies