காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது X பக்கத்தில், தமிழ்நாடும் காசியும் நமது சனாதனபாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இரண்டும் ஒன்றையொன்று கலாசார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வளப்படுத்தியுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சங்கமத்தை ஒரு விழா போல கொண்டாடும் பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை, கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் காசி மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன் நமது சமூகத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை குடும்பமாக மீட்டெடுத்தது.
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் முதலாவது குழு காசிக்கு புறப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒரே பாரதம் உன்னதபாரதம் என்ற சிந்தனையின் தூதர்கள். இதில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் வளமான, அறிவூட்டக் கூடிய மற்றும் ஆத்மார்த்தமான சுற்றுப்பயணம் அமைய எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடும் காசியும் நமது #சனாதனபாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இரண்டும் ஒன்றையொன்று கலாசார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வளப்படுத்தியுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சங்கமத்தை ஒரு விழா போல கொண்டாடும் மாண்புமிகு பிரதமர் @narendramodi… pic.twitter.com/ExSSXAhDbh
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 15, 2023