அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்ததை மட்டுமல்ல, வாக்குறுதி அளிக்காததையும் நிறைவேற்றியுள்ளார், அவரது உத்தரவாதங்களில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது, வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் பொய்களை நாடுகிறது. அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது
பாஜக தலைமையிலான மத்திய அரசு இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.3,378 கோடி வழங்கியுள்ளதாகக் கூறிய நட்டா, மலைப்பகுதியை தனது இரண்டாவது வீடாக பிரதமர் கருதுவதாகவும் அவர் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் மாதம் 1,500 ரூபாய்க்குக் காத்திருக்கிறார்கள், மக்கள் இன்னும் ஆங்கில வழி அரசுப் பள்ளிகளைத் தேடுகிறார்கள், இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள், விவசாயிகள் மாட்டுச் சாணமும் பாலும் 2 ரூபாய்க்கு வாங்கும் நேரத்தை எதிர்பார்க்கிறார்கள் என அவர் கூறினார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நட்டா தனது சொந்த மாநிலத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. பிலாஸ்பூரில் பாஜக தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.