மகளிருக்காக பா.ஜ.க. அயராது உழைக்கிறது: பிரதமர் மோடி உருக்கம்!
Apr 29, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்காக பா.ஜ.க. அயராது உழைக்கிறது: பிரதமர் மோடி உருக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி நாட்டின் குடிமக்களுக்குத் தெரிவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ஒரு நாடு தழுவிய முயற்சியாக, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து தொடங்கி வைத்தார்.

இந்த யாத்திரையின் மூலம் மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள் அனைத்து இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளையும், குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம், அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களின் நிறைவை அடைவதே நோக்கமாகும்.

இந்த யாத்திரையின்போது, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை வேன் கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் நிறுத்தப்படும். அங்கு, சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில், மேற்கண்ட வியாதிகளுக்கான அறிகுறி இருப்பவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இந்த யாத்திரையின் மூலம் நவம்பர் 26-ம் தேதி நிலவரப்படி, 995 கிராம பஞ்சாயத்துகளில் 5,470 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 7.82 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்திருப்பதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, பயனாளிகளின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் பயனளித்தன என்பது குறித்தும் விவாதித்தார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டதா என்றும் கேட்டறிந்தார். அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியைச் சேர்ந்த கல்யாணி ராஜ்போங்ஷி என்ற பயனாளியிடம் பிரதமர் மோடி பேசியபோது, அவர் எப்படி ஒரு சுய உதவிக் குழுவை உருவாக்கினார் என்பதையும், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது பற்றியும் விளக்கினார்.

தவிர, இதற்கு மத்திய அரசின் கடன்கள் தனக்கு உதவியாக இருந்ததாக பிரதமர் மோடியிடம் கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, “மற்ற பெண்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு பெண்ணுக்கு அதிகாரமளிப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்” என்றார்.

அதேபோல, ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த குஷாலா தேவி என்ற மற்றொரு பயனாளியிடம் பிரதமர் மோடி பேசியபோது, தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற்றதாகக் கூறினார். இதற்கு பிரதமர் மோடி, “நாட்டு பெண்களுடன் அரசு நிற்கிறது. உங்களைப் போன்றவர்கள் எங்களை கடினமாக உழைக்க தூண்டுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “ஒரே மாதத்தில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் 1,500 நகரங்களை சென்றடைந்திருக்கிறது. வளர்ந்த இந்தியா என்ற உறுதியுடன் ‘மோடியின் உத்தரவாத வாகனம்’ நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைகிறது.

பெண்கள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது. இந்த யாத்திரையை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் பா.ஜ.க. அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்த யாத்திரை 140 கோடி மக்களின் நலனுக்கானது” என்றார். தொடர்ந்து, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags: Viksit Bharat Sankalp Yatravirtually interactsbeneficiariesPM Modi
ShareTweetSendShare
Previous Post

மால்டா நாட்டின் கப்பல் கடத்தல்: களமிறங்கிய இந்திய கடற்படை!

Next Post

பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies