தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, முடிவுகளும் அன்றையதினமே வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

குறிப்பாக, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 163 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது 3-ல் 2 பங்கு வெற்றியாகும். அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், தற்போதைய படுதோல்வி அக்கட்சியை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரியை நியமிக்கப்படுவதாக கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதாவது, தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, கமல்நாத்திடம் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கமல்நாத்தும் டெல்லிக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே, அகில இந்தியத் தலைமை கமல்நாத்தை நீக்கிவிட்டு, ஜிது பட்வாரியை நியமித்திருக்கிறது.

எனினும், காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத் தலைவராக கமல்நாத் ஆற்றிய பங்களிப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவராக தீபக் பாஜி தொடர்வதற்கு கார்கே ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத் தலைமை பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CongressMadya PradeshPresidentkamalnath
ShareTweetSendShare
Previous Post

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

பாஜகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies