'பிங்க்' நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் - காரணம் என்ன?
Mar 15, 2026, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தங்களின் பச்சை நிற ஜெர்சியை அணிந்துக் கொண்டு ஆடாமல் மாறாக பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தென் ஆப்பிரிக்கா அணி மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த  “பிங்க் மேட்ச்” என்ற பெயரில் ஒரு போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்தப் “பிங்க் மேட்ச்” போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து பங்கேற்பார்கள். இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளது.

இந்த பிங்க் நிற போட்டியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

இது பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் போலேட்ஸி மொசெகி கூறுகையில், “கிரிக்கெட் ரசிகர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவ, விழிப்புணர்வு மட்டும் போதாது. செயல்திறன் மற்றும் பரிசோதனைக்கு மக்களை ஊக்குவிக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில்  பெண்களிடையே அதிகமாக இருக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தான். ஆனால் இது ஆண்களையும் பாதிக்கலாம் என்று கூறினார். முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: CricketIndiasouth africapink colourcancercancer awareness
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Next Post

மும்பை அணி நிர்வாகம் மீது கோபமா?

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies