பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் அதானி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்த தெரிவித்திருந்தார். உலக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் பிரதமரை தொடர்புப்படுத்தியும் அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இது குறித்து 8 வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்திக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.