சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!
Oct 24, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில அரசு பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் டிசம்பர் 23-ம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.

இந்த தங்க அங்கி ஊர்வலம் இன்று மாலை சன்னிதானம் வந்தடைவதால், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்று மாலை 3 மணிக்கு பதிலாக 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

தங்க அங்கி ஊர்வலத்தை தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்று, பின்னர் தங்க அங்கியை கோவில் கருவறைக்குள் எடுத்துச் செல்வர். தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

மேலும், நாளை காலை 10.30 முதல் 11.30 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். இதை முன்னிட்டு காலை நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

மண்டல பூஜையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று 64,000 பக்தர்களும், நாளை 70,000 பக்தர்களும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் செல்ல முடியும்.

இந்த நிலையில், நேற்று சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இப்படி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில், கேரள மாநில அரசு பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதாவது, உலகளவில் கொரோனா மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. வழக்கம்போல கொரோனா ஜெ.என்.1, கேரள மாநிலத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே, கேரள மாநில அரசு, சபரிமலை வரும் பக்தர்களின் சுகாதார விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆனாலும், பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, இடைவெளியைக் கடைப்பிடிக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, சுகாதார விஷயத்தில் கேரள மாநில அரசு அலட்சியத்துடன் இருக்கிறது. பக்தர்கள் குளிக்கும் பம்பை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறப்படுகிறது.

இதனால், பக்தர்களுக்கு தொற்று வியாதிகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும், கழிவுநீர் கலப்பைத் தடுக்க கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கேரள மாநில அரசின் இதுபோன்ற அலட்சியத்தால் கொரோனா மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆகவே, இனியாவது கேரள மாநில அரசு விழித்துக் கொண்டு, சபரிமலையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பக்தர்கள் தரிசனம் செய்யும் விவகாரத்தில் இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: KeralatempleSabarimalaiIyyappan
ShareTweetSendShare
Previous Post

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! – 3 பேர் கைது!

Next Post

ஒரு நொடியைக் கூட நாம் வீணாக்கக் கூடாது: பிரதமர் மோடி!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies