நாளை பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித்பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு புல் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் என்பதால் பயண நேரம் குறைவதோடு சராசரி வேகம் அதிகரிக்கும்.
முதல் ‘அமிரித் பாரத்’ ரயிலின் வீடியோவைப் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன் தனித்துவமான அம்சங்களைக் காட்சிப்படுத்தி தனது எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் ரயில் ஓட்டுநரின் அறையை ஆய்வு செய்து, பின்னர் ஒரு சரிவுப் பாதையைப் பயன்படுத்தி ரயிலின் பெட்டிக்குள் நுழைவதைக் காணலாம்.
வீடியோவில், அவர் ரயில் ஓட்டுநரின் அறையை ஆய்வு செய்து, பின்னர் ரயிலின் பெட்டிக்குள் நுழைவதைக் காணலாம்.
ரயிலில் உள்ள இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். இந்த ரயில் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் காரணமாக நீண்ட வழித்தடங்களில் குறைந்தது இரண்டு மணிநேரம் சேமிக்கும் என்று வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
ரயிலில் “புஷ்-புல்” தொழில்நுட்பம் உள்ளது, இது ரயில்களின் வேகத்தையும் பயணிகளின் வசதியையும் கணிசமாக அதிகரிக்கிறது என்று கூறினார்.
தவிர, பயணிகளின் வசதிக்காக நிறைய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
“புஷ்-புல் தொழில்நுட்பத்தின் காரணமாக அம்ரித் பாரத் ரயிலில் சிறந்த முடுக்கம் உள்ளது. இதன் பொருள், வாகனம் விரைவாக முடுக்கிவிடப்படுவதோடு, விரைவாக நின்றுவிடும், இதன் மூலம் வழியில் வளைவுகள் மற்றும் பாலங்கள் இருக்கும் இடங்களில் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
ஒவ்வொரு இருக்கைக்கு அருகிலும் சார்ஜிங் பாயிண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள், அகலமான கதவுகள் மற்றும் சிறப்பு சாய்வுதளங்களும் செய்யப்பட்டுள்ளன” என்று புது தில்லி ரயில் நிலையத்தில் ரயிலை ஆய்வு செய்த பின்னர் வைஷ்ணவ் கூறினார்.
“இன்ஜின்களில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் போன்று, அம்ரித் பாரத் ரயிலிலும் முழுமையான லோகோமோட்டிவ் கேப் நிறுவப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
குறைந்தபட்ச நீர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரயில் கழிவறைகளின் வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் வந்தே பாரத் ரயில்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் வரவிருக்கும் அமிர்த பாரத் ரயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவித்தார்.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸின் தொடக்கப் பயணம் அயோத்தியில் இருந்து தர்பங்கா செல்லும் வழித்தடத்தில் இருக்கும். பிரதமர் மோடி இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த பிறகு, தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை அறிய, நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு ரயிலின் பொது இயக்கத்தை ரயில்வே நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார். பின்னர் தொடங்கப்படும் ரயிலில் AC-II வரை செல்லும் பொது வகுப்பு இருக்கும் எனத் தெரிவித்தார்.