72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!
Jul 29, 2026, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமானோர் கூடினர். இதனால், கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.

இதையடுத்து, விஜயகாந்தின் உடலை தீவுத்திடலில் வைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதேசமயம், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சித் தொண்டர்களும், ரசிகர் மன்றத்தினரும், பொதுமக்களும் சாரைசாரையாக அணிவகுத்து வந்தனர். இதனால், மதியம் 1 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த இறுதி ஊர்வலம், மதியம் 2.30 மணிக்குத்தான் புறப்பட்டது.

ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்கக் கலந்துகொண்டனர். பின்னர், இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே மாலை 6.00 மணியளவில் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது.

அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தவிர, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியின், தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு, அனைவரும் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு கனத்த இதயத்தோடு புறப்பட்டுச் சென்றனர்.

Tags: FuneralVijayakanthM K StalinLast Rights
ShareTweetSendShare
Previous Post

2வது கிரிகெட் டெஸ்ட் போட்டி; பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

Next Post

”அம்ரித் பாரத்” ரயில்! – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies