புத்தாண்டின் முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் : பிரதமர் மோடி பெருமிதம்! 
Jul 26, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டின் முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் : பிரதமர் மோடி பெருமிதம்! 

Web Desk by Web Desk
Jan 2, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார். என் மாணவ குடும்பமே என தமிழில் பேசிய அவர், அழகிய மாநிலமான தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும்,  பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக் கழகங்களை தொடங்கியதாகவும்,  பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பல்கலைக் கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ, அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடையும் என்றும், கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும் என்றும்,  புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுவதாகவும்,உயர்கல்வியின் பூங்காவாக திகழ்கிறது தமிழகம் திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது தமிழக ஆர்.என்.ரவி, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

Tags: PM Modimodi speechtrichystalinTrichy Bharathidasan University Convocation
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் சிக்கிய இந்திய நடிகர் நாடு திரும்பியுள்ளார்!

Next Post

செயல்படாத வங்கிக்கணக்கு : விரிவான வழிகாட்டுதல் வெளியீடு!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies