எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி
Jun 9, 2025, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jan 2, 2024, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று  திறந்து வைத்தார். ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கியும் வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி   சிறப்புரையாற்றினார்.

எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு  நல்வாழ்த்துகள் என தமிழில் உரையை தொடங்கினார். நடிகர் விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். அவர் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே  முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துன்பத்தை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உளளது. ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்.  தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் மோடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தியை  எனக்குள் நிரப்பி செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாராத்தை நான் கற்று கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் மோடி கூறினார்.

5 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.  வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags: trichy airporttrichy airport terminaltrichy functionModiRNRAVItrichy
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா பந்துவீச்சு!

Next Post

ரஜினிக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்!

Related News

12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் – மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் மணிகள் முளைத்து வீணாகும் நெல் – அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை!

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை – போலீஸ் விசாரணை!

வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – சரிந்து விழுந்த ராட்சத பேனர்!

மயிலாடுதுறை அருகே அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய இளைஞர்!

கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் – இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்

மக்களை ஏமாற்றும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அமித்ஷா மதுரை வந்துள்ளார் – அண்ணாமலை

தமிழகத்தில் SILENT OPERATION – நயினார் நாகேந்திரன் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies