வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!
Jul 25, 2025, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்றும், சிலர் அழைப்பிதழ் வந்ததாகவும், ஆனால், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என்றும் கூறிவருக்கின்றனர்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க. இராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், தனது கட்சியின் தொண்டர்கள் யாரும் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜ.க. நடத்தும் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜ.க.வின் நிகழ்ச்சி. பா.ஜ.க.வின் பேரணி. பா.ஜ.க. நிகழ்ச்சி முடிந்த பிறகு நாங்கள் அயோத்தி செல்வோம் என்று கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இதற்காக இராமர் பக்தர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

எனினும், எல்லோரும் 22-ம் தேதி அயோத்திச் சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும்.

இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று கூறிவருகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களை ஹனுமன் அழைத்து வருவார்” என்று கூறினார்.

Tags: dharmendra pradhanRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

Next Post

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies