ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 பேர் மீது உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது.
பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இந்தியாவில் தனது தளத்தை அமைக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் மற்றும் தவறான பதிவுகளை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை இடைமறித்துள்ளது.
இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 11 இடங்களில் உபி ஏடிஎஸ் சோதனை நடத்தியது.அப்போது பல ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மிர்சா சைஃப் பெய்க், அப்துல் வாஹித், யாசிர், ஜியாவுதீன் சித்திக், தோர் பான் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர்களின் மறைவிடங்களில் இருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள், ஜிஹாதி இலக்கியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் 11 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை லக்னோவில் உள்ள UP ATS அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சதாம் ஷேக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரின் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை ATS கண்டுபிடித்துளளது. அதில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும்போது முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஜிஹாத் என் இரத்தத்தில் உள்ளது.ஒசாமா பின்லேடன் மற்றும் புர்ஹான் வானி ஆகியோர் எனது முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஷேக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பயங்கரவாதி அர்ஷ் தலாவின் உதவியாளர் மன்பிரீத் சிங் மீது தேசிய புலானாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்களை சேகரித்தல் மற்றும் டாலா மற்றும் KTF க்கு நிதி திரட்டியதாக கேடிஎப் அமைப்பை மத்திய அரசு தடை செய்து பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
இதேபோல், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஜாவேத் அகமது மட்டூ குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.