இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்
Mar 15, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். பின்னர் நேபாள பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, நான் இன்று உங்கள் முன்  திருப்தியுடன், பெருமையுடன் நிற்கிறேன். புகழ்பெற்ற திரிபுவன் பல்கலைக்கழகத்தின் புதிதாகக் கட்டப்பட்ட மைய நூலகம், அத்துடன் 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைத் திட்டம் ஆகியவை  நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறேன். நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு  எங்கள் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 1,000 கோடி நிதித் தொகுப்பை நீட்டிக்க 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான எங்கள் முடிவை, நேபாள பிரதமர் பிரசண்டாவிடம் நேற்று தெரிவித்தேன்.

பல ஆண்டுகளாக,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன்,  இந்தியா-நேபாள உறவின் உண்மையான மாற்றத்தை நாங்கள் கண்டோம். இந்த  கூட்டாண்மை பல மடங்கு விரிவடைந்துள்ளது . மின் துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட  அமலாக்கம் ஆகிய துறைகளில் சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அண்டை நாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன், குறிப்பாக நேபாளத்துடனான  உறவைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகிய கொள்கைகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை எங்களுடன்  இணைந்து நமது வளர்ச்சிப் பயணத்தில் அழைத்துச் செல்வோம் என ஜெய்சங்கர் கூறினார்.

Tags: Nepal PM PrachandaneapalPM ModiIndiaJaishankarTribhuvan University Central Librarypost-earthquake reconstruction
ShareTweetSendShare
Previous Post

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Next Post

சென்னை மாரத்தான் ஓட்டம் – மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies