இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். பின்னர் நேபாள பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, நான் இன்று உங்கள் முன்  திருப்தியுடன், பெருமையுடன் நிற்கிறேன். புகழ்பெற்ற திரிபுவன் பல்கலைக்கழகத்தின் புதிதாகக் கட்டப்பட்ட மைய நூலகம், அத்துடன் 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைத் திட்டம் ஆகியவை  நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறேன். நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு  எங்கள் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 1,000 கோடி நிதித் தொகுப்பை நீட்டிக்க 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான எங்கள் முடிவை, நேபாள பிரதமர் பிரசண்டாவிடம் நேற்று தெரிவித்தேன்.

பல ஆண்டுகளாக,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன்,  இந்தியா-நேபாள உறவின் உண்மையான மாற்றத்தை நாங்கள் கண்டோம். இந்த  கூட்டாண்மை பல மடங்கு விரிவடைந்துள்ளது . மின் துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட  அமலாக்கம் ஆகிய துறைகளில் சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அண்டை நாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன், குறிப்பாக நேபாளத்துடனான  உறவைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகிய கொள்கைகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை எங்களுடன்  இணைந்து நமது வளர்ச்சிப் பயணத்தில் அழைத்துச் செல்வோம் என ஜெய்சங்கர் கூறினார்.

Tags: IndiaJaishankarTribhuvan University Central Librarypost-earthquake reconstructionNepal PM PrachandaneapalPM Modi
ShareTweetSendShare
Previous Post

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Next Post

சென்னை மாரத்தான் ஓட்டம் – மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies