இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்
Jul 24, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Jan 5, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். பின்னர் நேபாள பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, நான் இன்று உங்கள் முன்  திருப்தியுடன், பெருமையுடன் நிற்கிறேன். புகழ்பெற்ற திரிபுவன் பல்கலைக்கழகத்தின் புதிதாகக் கட்டப்பட்ட மைய நூலகம், அத்துடன் 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைத் திட்டம் ஆகியவை  நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறேன். நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு  எங்கள் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 1,000 கோடி நிதித் தொகுப்பை நீட்டிக்க 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான எங்கள் முடிவை, நேபாள பிரதமர் பிரசண்டாவிடம் நேற்று தெரிவித்தேன்.

பல ஆண்டுகளாக,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன்,  இந்தியா-நேபாள உறவின் உண்மையான மாற்றத்தை நாங்கள் கண்டோம். இந்த  கூட்டாண்மை பல மடங்கு விரிவடைந்துள்ளது . மின் துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட  அமலாக்கம் ஆகிய துறைகளில் சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அண்டை நாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன், குறிப்பாக நேபாளத்துடனான  உறவைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகிய கொள்கைகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை எங்களுடன்  இணைந்து நமது வளர்ச்சிப் பயணத்தில் அழைத்துச் செல்வோம் என ஜெய்சங்கர் கூறினார்.

Tags: Tribhuvan University Central Librarypost-earthquake reconstructionNepal PM PrachandaneapalPM ModiIndiaJaishankar
ShareTweetSendShare
Previous Post

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Next Post

சென்னை மாரத்தான் ஓட்டம் – மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies