ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி முன்னாள் எம்எல்ஏ தில்பாஹா சிங் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
யமுனாநகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர் மற்றும் கர்னால் ஆகிய 20 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் 5 கோடி ரொக்கம், 4 முதல் 5 கிலோ எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், 300 தோட்டாக்கள்,மதுபாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.