இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!
Oct 25, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் செல்கிறார்.

அயோத்தியிலுள்ள இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாயில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரம் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மேலும், அயோத்தி இராமர் கோவிலுக்கு பக்தர்கள் பலரும் காணிக்கையாக பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஐதராபாத்தைச் சேர்ந்த இராம பக்தர் ஒருவர், அயோத்தி ஸ்ரீராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை காணிக்கையாக வழங்கவிருக்கிறார். இதை அயோத்தி கோவிலில் ஒப்படைப்பதற்கு பாதயாத்திரையாக அயோத்திக்கு செல்கிறார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி. தீவிர இராம பக்தரான இவர், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமருக்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

மேலும், அக்காலணிகளை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8,000 கி.மீ. தூரத்துக்கு புனித நடைப்பயணமாக சென்று வழங்கத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி, காலணிகளை தலையில் சுமந்தபடி ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

இதனிடையே, தீடீரென லண்டன் செல்ல வேண்டி இருந்ததால், சீனிவாச சாஸ்திரி, தனது நடைப்பயணத்தை சில நாட்கள் ஒத்திவைத்தார். பின்னர், மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தவர், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கி இருக்கிறார்.

இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆகவே, இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்பதால், தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சீனிவாச சாஸ்திரி கூறுகையில், “ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்து கொண்டார். அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். தற்போது எனது தந்தை இல்லை.

எனினும், எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ஸ்ரீராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப் பயணமாக வந்திருக்கிறேன். இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்றடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.

இராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கெனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கி இருக்கிறேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்திருக்கிறேன். எனது மகன் சல்லா பவன் குமார், ஒரு சவுண்டு இன்ஜினீயர். அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்திருக்கிறார்” என்றார்.

Tags: Ram TempleAyodyaDevoteeGolden SlippersWalking
ShareTweetSendShare
Previous Post

அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies