இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!
Jul 25, 2025, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும், சௌதி அரேபியாவும் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-இல் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன. இது இரு தரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று சௌதி அரேபியாவுக்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் வீ.முரளிதரனும் சென்றார்.

ஜெட்டா நகரைச் சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான சௌதி அமைச்சர் டாக்டர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவை சந்தித்தனர். அப்போது, ஹஜ் ஒப்பந்தம் 2024-ல் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

ஆண் பாதுகாவலர் (மெஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கான விவாதங்களுடன், உள்ளடக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.

இது இந்திய முஸ்லீம் யாத்ரீகர்களுக்கு சுமூகமான புனித யாத்திரை அனுபவங்களை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே உள்ளடங்குதல் மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கிறது.

இதுகுறித்து ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவின் டிஜிட்டல் முயற்சிகளுக்கு, குறிப்பாக கடைசி நேர யாத்ரீகர் தகவல் தேவைகளை நிவர்த்தி செய்ததற்கு சௌதி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
யாத்ரீகர்களின் விரிவான நல்வாழ்வுக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, ஜெட்டாவில் நாளை நடைபெறும் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டின் தொடக்க விழாவில் ஸ்மிருதி இரானி கலந்து கொள்கிறார். சௌதி அரேபியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் தொடர்புகளை வளர்க்கும் வகையில் தூதுக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Indiasaudi arabiaBilateral Haj Agreement 2024
ShareTweetSendShare
Previous Post

பாலியல் புகார்: ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்!

Next Post

வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் :  5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies