இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவும், சௌதி அரேபியாவும் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-இல் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன. இது இரு தரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று சௌதி அரேபியாவுக்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் வீ.முரளிதரனும் சென்றார்.

ஜெட்டா நகரைச் சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான சௌதி அமைச்சர் டாக்டர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவை சந்தித்தனர். அப்போது, ஹஜ் ஒப்பந்தம் 2024-ல் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

ஆண் பாதுகாவலர் (மெஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கான விவாதங்களுடன், உள்ளடக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.

இது இந்திய முஸ்லீம் யாத்ரீகர்களுக்கு சுமூகமான புனித யாத்திரை அனுபவங்களை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே உள்ளடங்குதல் மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கிறது.

இதுகுறித்து ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவின் டிஜிட்டல் முயற்சிகளுக்கு, குறிப்பாக கடைசி நேர யாத்ரீகர் தகவல் தேவைகளை நிவர்த்தி செய்ததற்கு சௌதி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
யாத்ரீகர்களின் விரிவான நல்வாழ்வுக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, ஜெட்டாவில் நாளை நடைபெறும் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டின் தொடக்க விழாவில் ஸ்மிருதி இரானி கலந்து கொள்கிறார். சௌதி அரேபியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் தொடர்புகளை வளர்க்கும் வகையில் தூதுக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Indiasaudi arabiaBilateral Haj Agreement 2024
Share
Tweet
SendShare
Previous Post

பாலியல் புகார்: ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்!

Next Post

வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் :  5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies