ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விருந்தினர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்!
Sep 9, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விருந்தினர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அனைத்து விருந்தினர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

அழைப்பிதழில் கோவில் மற்றும் ராமர் உருவம் உள்ளது. பெரிய, அழகிய வகையில் வடிவமைக்கப்பட்ட அட்டைகள் தவிர, அழைப்பிதழில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் சுருக்கமான விவரங்கள் அடங்கிய சிறு புத்தகமும் உள்ளது. அழைப்பிதழ்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன.

அறக்கட்டளையின் அழைப்பாளர் பட்டியலில் 7,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நடசத்திரங்கள் அடக்கம்.

விண்வெளி ஆய்வு முதல் கலைகள் வரை பல்வேறு தரப்பு மக்களையும், மறந்து போன பழங்குடியினர் முதல் கட்டிடக் கலைஞர்கள் வரை பல்வேறு தரப்பினரை நாங்கள் அழைத்துள்ளோம். வாழ்க்கையில் முத்திரை பதித்த பலர் அழைக்கப்பட்டுள்ளதாக என்று கோயில் அறக்கட்டளை மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ராமர் கோவில் இயக்கத்தின் போது உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்

எங்களிடம் தன்னார்வலர்களின் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. ஒவ்வொரு விருந்தினரும் அழைப்பிதழ் அட்டையை நேரடியாக பெறுவார்கள், தபால் அல்லது கூரியர் டெலிவரி சேவை மூலம் அல்ல” என்று கோயில் அறக்கட்டளை உறுப்பினர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. கோவில் அறக்கட்டளை மூத்த பிரதிநிதி ஒருவரால் அழைப்பிதழ் இருவருக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் எதிர்மனுதாரரான இக்பால் அன்சாரி, ஜனவரி 5ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பைப் பெற்றார். அறக்கட்டளை பிரதிநிதி ஒருவர் அதை அயோத்தியில் ராமர் பாதைக்கு அருகில் உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கினார்.

வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் நேரடியாக வழங்கப்படும் எனவும், இந்தியாவில் உள்ள எங்கள் நெட்வொர்க்கைப் போலவே, வெளிநாடுகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு இந்தியாவில் இருந்து அழைப்பிதழை அனுப்புவோம், பின்னர் பிரதிநிதிகள் அதை விருந்தினர்களுக்கு நேரடியாக வழங்குவார்கள் என அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்தார்.

Tags: Ram MandirAyothiramar temple invitationShri Ram JanmabhoomiPM ModiModiayodhyaRamar Temple
ShareTweetSendShare
Previous Post

அகதிகள் முகாமில் தீ விபத்து – 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்

Next Post

இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies