உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் - பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!
Jul 20, 2026, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 09:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சூழலியல் பூங்கா அமைக்கும் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதகையில் நீண்டகால பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரேஸ் கிளப்பில் பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழம் மட்டுமல்ல அண்டை மாநில மற்றும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருகை தருகின்றனர். அந்த வாகனங்களை பார்க்கிங் செய்ய போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் சாலைகளிலேயே நிறுத்தி வைப்பதும், அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் வரி செலுத்தாத காரணத்தினால் உதகை மையப்பகுதியில் அமைந்திருக்கும் குதிரைப் பந்தய மைதானத்தில், பார்க்கிங் அமைப்படுவதற்கு பதிலாக பூங்கா அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

உதகை நகரில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் கர்நாடக பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ள நிலையில், உதகை நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூங்காக்கள் உள்ளது. இத்தனை பூங்காக்கள் இருக்கும் போது மேலும் ஒரு பூங்கா தேவையற்றது எனவும், அந்த இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்றுலாத் தளங்களில் சூழலியல் பூங்காக்கள் அவசியமான ஒன்று தான் என்றாலும் கூட, தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பார்க்கிங் அமைப்பதே சிறந்த முடிவாக அமையும் என்பதே உதகை பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

Tags: opposedLocal residentsPARKING BUILDBUILD PARKINGootyRace ClubUdhagamandalam townland reclaimedecological park
ShareTweetSendShare
Previous Post

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

Next Post

எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் – உச்ச நீதிமன்றம்

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies