7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!
Jul 25, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆகவே, நக்சல்களை ஒடுக்க கர்நாடக அரசு ‘நக்சல்கள் தடுப்புப் படை’ என்கிற பெயரில் தனிப் படையை அமைத்திருந்தது.

இந்த தனிப்படையினர், நக்சல்களை பிடிப்பதற்காக துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 2005 பிப்ரவரி மாதம் முகாமிட்டிருந்தனர்.

அப்போது, பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், தனிப்படை போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீஸாரால், எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸாரும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். பின்னர், போலீஸாரின் முகாமுக்குள் நுழைந்த நக்சல் கும்பல், போலீஸார் வைத்திருந்த அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து,  இச்சம்பவம் தொடர்பாக பாவகடா போலீஸார் விசாரணை நடத்தி, 42 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில் இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் ஜாமீன் இல்லாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பலரும் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களை பாவகடா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து வருன்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், பத்மா, போய ஓபலேஷ், ராமமோகன், ஆஞ்சனேயலு ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து பாவகடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: karnatakaArrestAndraNaxals
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீராங்கனை தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies