7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!
Apr 29, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆகவே, நக்சல்களை ஒடுக்க கர்நாடக அரசு ‘நக்சல்கள் தடுப்புப் படை’ என்கிற பெயரில் தனிப் படையை அமைத்திருந்தது.

இந்த தனிப்படையினர், நக்சல்களை பிடிப்பதற்காக துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 2005 பிப்ரவரி மாதம் முகாமிட்டிருந்தனர்.

அப்போது, பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், தனிப்படை போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீஸாரால், எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸாரும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். பின்னர், போலீஸாரின் முகாமுக்குள் நுழைந்த நக்சல் கும்பல், போலீஸார் வைத்திருந்த அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து,  இச்சம்பவம் தொடர்பாக பாவகடா போலீஸார் விசாரணை நடத்தி, 42 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில் இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் ஜாமீன் இல்லாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பலரும் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களை பாவகடா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து வருன்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், பத்மா, போய ஓபலேஷ், ராமமோகன், ஆஞ்சனேயலு ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து பாவகடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: karnatakaArrestAndraNaxals
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீராங்கனை தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies