7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!
Jul 29, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆகவே, நக்சல்களை ஒடுக்க கர்நாடக அரசு ‘நக்சல்கள் தடுப்புப் படை’ என்கிற பெயரில் தனிப் படையை அமைத்திருந்தது.

இந்த தனிப்படையினர், நக்சல்களை பிடிப்பதற்காக துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 2005 பிப்ரவரி மாதம் முகாமிட்டிருந்தனர்.

அப்போது, பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், தனிப்படை போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீஸாரால், எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸாரும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். பின்னர், போலீஸாரின் முகாமுக்குள் நுழைந்த நக்சல் கும்பல், போலீஸார் வைத்திருந்த அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து,  இச்சம்பவம் தொடர்பாக பாவகடா போலீஸார் விசாரணை நடத்தி, 42 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில் இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் ஜாமீன் இல்லாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பலரும் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களை பாவகடா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து வருன்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், பத்மா, போய ஓபலேஷ், ராமமோகன், ஆஞ்சனேயலு ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து பாவகடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: karnatakaArrestAndraNaxals
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீராங்கனை தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies