நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Sep 8, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரது அமைச்சரவை சகாக்களும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர், அம்மாநில லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், “முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 18 அமைச்சர்கள், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வர் நிவாரண நிதியைத் தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ பி.ஜோசப், ஹருண் உல் ரஷீத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. விசாரணை முடிவில், கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், “பேரிடர் காலத்தில் முதல்வர் தரப்பு எடுத்த சில முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அவை அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பதைத் தீர்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார்தாரரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஆனால், லோக் ஆயுக்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சசிக்குமார் தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.ஜெ.தேசாய், நீதிபதி வி.ஜி.அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கண்ட மனு மீது விளக்கமளிக்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Keralahigh courtNoticeCM Pinarayi vijayan
ShareTweetSendShare
Previous Post

அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு – ஏன் தெரியுமா?

Next Post

ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

Related News

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies