நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரது அமைச்சரவை சகாக்களும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர், அம்மாநில லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், “முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 18 அமைச்சர்கள், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வர் நிவாரண நிதியைத் தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ பி.ஜோசப், ஹருண் உல் ரஷீத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. விசாரணை முடிவில், கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், “பேரிடர் காலத்தில் முதல்வர் தரப்பு எடுத்த சில முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அவை அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பதைத் தீர்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார்தாரரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஆனால், லோக் ஆயுக்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சசிக்குமார் தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.ஜெ.தேசாய், நீதிபதி வி.ஜி.அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கண்ட மனு மீது விளக்கமளிக்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Keralahigh courtNoticeCM Pinarayi vijayan
ShareTweetSendShare
Previous Post

அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு – ஏன் தெரியுமா?

Next Post

ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies