நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 06:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரது அமைச்சரவை சகாக்களும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர், அம்மாநில லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், “முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 18 அமைச்சர்கள், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வர் நிவாரண நிதியைத் தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ பி.ஜோசப், ஹருண் உல் ரஷீத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. விசாரணை முடிவில், கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், “பேரிடர் காலத்தில் முதல்வர் தரப்பு எடுத்த சில முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அவை அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பதைத் தீர்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார்தாரரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ஆனால், லோக் ஆயுக்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சசிக்குமார் தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.ஜெ.தேசாய், நீதிபதி வி.ஜி.அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கண்ட மனு மீது விளக்கமளிக்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Keralahigh courtNoticeCM Pinarayi vijayan
Share
Tweet
SendShare
Previous Post

அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு – ஏன் தெரியுமா?

Next Post

ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies